சாப்பிட்டு வரதுக்குள்ள ஆட்டைய போட்டுட்டிங்களே டா… வீட்டின் முன் நிறுத்தி 1/2 மணி நேரத்திலேயே கார் திருட்டு..!

கோவை ராம்நகர் கோகுலே வீதியை சேர்ந்தவர் சிவா (வயது 41) மெக்கானிக். இவர் தனது காரை அவரது வீட்டின் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்துபார்த்த போது காரை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிவா காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..