நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த அரசு பஸ் – அச்சத்தில் அலறி அடித்து ஒடிய பயணிகள்.!!

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்,. பஸ் ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது என்ஜினில் இருந்து புகை வந்தது . இதையடுத்து டிரைவர் பஸ்சை ஒரமாக நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் தீப்பிடித்து பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..