ஓட்டல் அதிபர், பள்ளி மாணவன் எங்கோ மாயம்..!

கோவை சூலூர் பக்கம் உள்ள குமரன் கோட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 30) அந்தப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 7-ந்தேதி ஓட்டலுக்கு சாமான்கள் இருசக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாயார் குருவம்மாள் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்  .

இதேபோல பேரூர் பக்கம் உள்ள ராமச்செட்டிப்பாளையம் சேர்ந்தவர் ரங்கசாமி .இவரது மகன் சூர்யா (வயது 14) சுண்டக்கா முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான் . 7 -ந் தேதி பள்ளிக்கு சென்றவன் வீடு திரும்ப வில்லை. இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.