ஊஞ்சலில் விளையாடிய சிறுமி கழுத்து இறுக்கி பரிதாப பலி..

கோவை சவுரிபாளையம் பாரதிபுரம்,டேங்க் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நேகா ஸ்ரீ ( வயது 11)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6 – ஆம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று குழந்தைகளுடன் வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஊஞ்சல் சேலை கழுத்தில் இறுக்கி மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் நேகா ஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.