சிறுமியை திருமணம் செய்தவர் தாயுடன் கைது..!

தாம்பரம் : மேற்கு தாம்பரம் பகுதியில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் 16 வயது சிறுமியை ஆனந்த் வயது 30 என்பவன் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளான். இந்நிலையில் 3 1/2 மாதம் முடிந்து கருவுற்ற நிலையில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படுவே தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுளால். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தை திருமணத்தை தடுக்கும் நோக்கில் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியின் கணவனை யும் அவரது தாயார் விஜயாவையும் சிறுமி என தெரிந்தும் திருமணம் செய்து வைத்துதால் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.