85 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.!!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 48) இவர் 16 -9 -20 21 அன்று மாரப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்த 85 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்தார். இந்த குற்றத்திற்காக அவர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று (27.03.2024) முடிவு பெற்று குற்றவாளி பொன்னுசாமிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் பிரபு ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.