பொது இடத்தில் மாடு வெட்டியவர் கைது..!

கோவை குறிச்சிசுன்னத் ஜமாத் மசூதி ரோட்டை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் சஜித் அலி ( வயது 24)இவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார்.கடந்த 19ஆம் தேதி இவர் குறிச்சி என். பி. இட்டேரி முதல் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன் உள்ள ரோட்டில் காங்கேயம் மாட்டை இறைச்சிக்காக வெட்டினாராம். இதுகுறித்து சுண்ணாம்பு காளவாய், கஸ்தூரி நகரை சேர்ந்த கோழி இறைச்சி வியாபாரி முகமத் ரியாஸ் (வயது 24) கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார் . போலீசார் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாட்டு இறைச்சி வியாபாரியான சஜித்அலியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.