கோவை மாலுக்கு கணவருடன் சென்ற புதுப்பெண் திடீர் மாயம்..!

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் ரோட்டை சேர்ந்தவர் தீபக் ஹரிஷ் . (வயது 26) இவரது மனைவி அபிஷிக் ஸ்ரீ (வயது 21) எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது .இந்த நிலையில் கணவன் – மனைவி இருவரும் நேற்று முன்தினம் சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு (மால்) சென்றனர். அங்கு கழிப்பிட அறைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அபிஷிக் ஸ்ரீ மீண்டும் திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் தீபக்ஹரிஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார். அபிஷிக்ஸ்ரீயின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது..