வீடு புகுந்து 10 பவுன் நகை திருடியவர் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமதாஸ். இவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். அவர் கடந்த 4-ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது . வீட்டிலிருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று நேற்று தனிப்படையினர் அலி கோயா(51) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். அதன் பேரில்அலி கோயாவைகைது செய்து அவரிடமிருந்து10 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். , மேலும் மேற்படி நபர் மற்றொரு வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பதுவிசாரணையில் தெரிய வந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.