தூத்துக்குடி மாவட்டம், கருவேலம்பாடு,மேல தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 58) இவர்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் தனது மகள் புஷ்பலதா வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபெருமாளும், அவரது தம்பி வெள்ள துரையும் மது அருந்தினார்களாம். பின்னர் பெத்தநாயக்கன்பாளையம்,கீர்த்தி நகரில் உள்ள உறவினர்வீட்டில் படுத்து உறங்கினார்கள்: சிவபெருமாள் எழுந்திருக்கவில்லை. அவரை சிகிச்சைக்காக கோவில்பாளையத்தில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மகள் புஷ்பலதா கோவில் பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு..
