அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தவர் கைது..!

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் நேற்று மத்திய சிறை ரோட்டில் உள்ள ஆபீசர் கிளப் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி சந்திரசேகரன் ( வயது 58 )கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.