ஸ்கூட்டரில் போதை ஊசி, மாத்திரைகள் கடத்தியவர் கைது..!

கோவை ஆர். எஸ். புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலையில் புருக் பாண்ட் ரோடு சிரியன் சர்ச் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள், 27 போதை ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . அவரிடம் இருந்த 2 செல்போன்கள் , ஸ்கூட்டர் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினார்கள் .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் . விசாரணையில் அவர் பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி ரோட்டை சேர்ந்த பாஸ்கர் ( வயது 44) என்பது தெரியவந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..