செல்போன் கடையில் திருடியவர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுத்தோட்ட பகுதியில் செல்போன் கடை நடத்திய வருபவர் வெற்றிவேல் ( வயது 26 )கடந்த 3ஆம் தேதி இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 10 செல்போன்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து வெற்றிவேல் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்,சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் ஊமபாளையம், பாலப்பட்டி ரோட்டை சேர்ந்த பழனிச்சாமி மகன் மாரிமுத்து ( வயது 30 )என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து 10 செல்போன்கள் மீட்கப்பட்டது . மேலும் விசாரணை நடந்து வருகிறது.