தாம்பரம் போலீசை தாக்கிய ரவுடிகள் கைது..!

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி அடுத்த கண்ணகி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை 4.30 மணி அளவில் எழில் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தலைமை காவலர் புஷ்பராஜ் மற்றும் காவலர் சிலம்பரசன் இருவரும் ரோந்து சுற்றி வரும் போது எழில் நகர் 16 வது பிளாக் அருகில் 1. பிரேம் வயது 23 தகப்பனார் பெயர் சோமு சுனாமி குவாட்டர்ஸ் கண்ணகி நகர் சென்னை 2.ராகுல் வயது 22 தகப்பனார் பெயர் குமார் எழில் நகர் சென்னை 3. சந்தோஷ் குமார் வயது 22 தகப்பனார் பெயர் விஜயகுமார் எழில் நகர் சென்னை என்ற மூன்று ரவுடிகளும் போதையில் கத்தி வைத்துக் கொண்டு சுற்றி வந்ததை போலீசார் விசாரிக்கும் போது கோகுல் என்ற ரவுடி தலைமை காவலர் புஷ்பராஜ் வலது கையை கடித்து விட்டான். போதையில் இருந்த மற்றொரு ரவுடி கோகுலை விடச் சொல்லி பிரேம் என்பவன் தன் கையில் வைத்திருந்த உடைந்த பாட்டிலை வைத்துக்கொண்டு தன் நெஞ்சில் கிழித்துக் கொண்டு காவலர் சிலம்பரசனை தாக்க வந்த போது இரு காவலர்களும் ரவுடிகளை அங்கேயே விட்டு விட்ட போது ரவுடிகள் காவலர்கள் மீது கல்லை எரிந்துள்ளனர். இந்த சம்பவத்தில் காவலர்களுக்கு காயம் ஏற்படவில்லை. கையில் காயம் ஏற்பட்ட தலைமை காவலர் புஷ்பராஜ் கண்ணகி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சிலம்பரசன் கொடுத்த புகாரில் மூன்று ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் .பின்பு சிறையில் அடைக்கப்பட்டனர்..