வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது..!

கோவை காளப்பட்டியில் உள்ள பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 80) நேற்று முன்தினம் பகலில் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் மூதாட்டி நஞ்சம்மாளை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டார் .காயத்துடன் வீட்டில் கிடந்த நஞ்சம் மாளை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர் .அப்போது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துஇந்த மூதாட்டியிடம் கொள்ளை நடத்தியதும் அவர்கள் அந்த பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போசார்தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்த நதியா என்ற நர்மதா ( வயது 23) அவரது காதலன் காளப்பட்டியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் ( வயது 28) என்பதுதெரிய வந்தது .நர்மதாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றதால் விக்கியுடன்காதல் ஏற்பட்டு அந்த பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். கள்ளக்காதல் ஜோடிகள் செலவுக்கு பணம் இல்லாததால் இந்த கொள்ளையை நடத்தி உள்ளது தெரியவந்தது .இவர்களிடமிருந்து 3 பவுன் செயின் மீட்கப்பட்டது. 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.