ஒற்றை யானை தாக்கி தொழிலாளி பரிதாப பலி..

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 47) கூலி தொழிலாளி .இவர் நேற்று இரவு அவரது வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கியது .இதில் படுகாயம் அடைந்த சந்திரனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சந்திரன் இறந்தார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஒற்றை யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..