பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோவில் கைது..!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 39 ) இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் நம்ம ஊர் – நம்ம பள்ளி என்ற திட்டத்தில் அறிவியல் செய்முறை வகுப்பு எடுத்து வந்தார். சம்பவத்தன்று 7-ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு பாடம் எடுத்தார். அப்போது அங்கு வந்த மாணவி ஒருவர் அவரிடம் தங்களது வகுப்பிற்கு எப்போது பாடம் எடுக்க வருவீர்கள் ? என்று கேட்டுள்ளார். அப்போது ஆசிரியர் அய்யாசாமி அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசிதாக தெரிகிறது :இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது குறித்து வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா ஆசிரியர் அய்யாசாமிடம் விசாரணை நடத்தினார் .இதில் அவர் மாணவியிடம் அவர் ஆபாசமாக பேசியது தெரியவந்தது .இதை யடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.