திருமண மண்டப முதலாளி கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை… தடுக்க வந்த 2 வது மனைவியும், மகளும் மாமியாருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு.. முகமூடி கொள்ளையர்கள் வெறிச்செயல்!!

முகமூடி அணிந்து வந்த குற்றவாளி நான் வெட்டி கொலை செய்தது ஃபாரின் ஸ்டைல்…  முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என
சொல்லி தப்பி ஓட்டம்..
ஆவடியை அடுத்த அண்ணனூர் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன் வயது 64. திருமண மண்டபம் வைத்து நடத்தி வருகிறார். இவரது 2 வது அன்பு மனைவி ஷர்மிளா வயது 43. மாமியார் ஆறுமுகம் அம்மாள் வயது 76 . மகள் தீச்சிதா வயது 12 ஆகியோருடன் சந்தோஷமாக வசித்து வருகிறார். இரவு நேரம் ஆனதால் ஒரு மர்ம ஆசாமி முகமூடி அணிந்து வெறித்தனமாக கத்தினான். நீ யாருடா என மாதவன் கேட்க நானாடா வாங்கிக்க சரமாரியாக உடல் எங்கும் குத்தினான் மாதவனின் அலறல் சத்தத்தை கேட்ட மாமியார் ஆறுமுகம் அம்மாள் மனைவி ஷர்மிளா மகள் தீட்ஷிதா ஆகியோர் அலறினர். முகமூடி அணிந்த கொலைக்காரன் மாமியாரையும் மனைவியையும் மகளையும் கத்தியால் வெட்டினான். மாதவனோ யார் இந்த படுபாவி என்னை வெட்டிப்புட்டான் என்னை காப்பாத்துங்க என அலறிக் கொண்டே செத்துப் போனார் . படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாதவனை குத்தி கொலை செய்த முகமூடி அணிந்த மர்ம நபர் நான் வெட்டியது ஃபாரின் ஸ்டைல் முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என சொல்லிக் கொண்டே ஓடினான். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சொத்து பிரச்சனைக்காக நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது..