மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாப பலி..

கோவை ராமநாதபுரம், ,80 அடி ரோடு, காவேரி நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மனைவி கோவிந்தம்மாள் ( வயது 49) இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர். நேற்று இவர் சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் நின்று பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்த அவரது மகன் அசோக் குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத் குமார், சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள் . இது தொடர்பாக கட்டிட மேஸ்திரி நாகராஜன் வீட்டின் உரிமையாளர் டேனியல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..