குட்கா கொடுக்க மறுத்த பெண்ணை கிழே தள்ளிவிட்டு செயின் பறிப்பு..!

கோவை சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 49 ) இவரது தாயார் மைக்கல் அறிவொளி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் இவரது தாயார் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் குட்கா இருக்கிறதா? என்று கேட்டார். அவர் இல்லை என்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி அவரது தாயாரை பிடித்து  கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து மகன் கிருஷ்ணகுமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்..