சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மாயம்.!!

கோவை பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி, சாந்தி மேடு பகுதியைச் சேர்ந்தவர் டோனி ஹர்மன். இவரது மனைவி ஆஷா பிரிசிலா ( வயது 39)எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த ஒரு வாரமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பீளமேட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 3-வது மாடியில் உள்ள வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று அவரது கணவர் டோனி ஹர்மன் மருந்து வாங்குவதற்காக அங்குள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது படுக்கையில் இருந்த மனைவியை காணவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..