திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், அத்வானி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( வயது 54) கூலி தொழிலாளி. இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் குடிப்பழத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் தங்கம்மாள் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..