வீடு புகுந்து தங்க நகைகள்,பணம் திருட்டு – வாலிபர் கைது.!!

கோவை மாவட்டம் கோமங்கலம் பகுதியில் வசிப்பவர் வேலுமணி (வயது 65) விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 5.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.  இது தொடர்பாக கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று தனிப்படையினர் உடுமலை பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சரவணன்(வயது 39) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதன் பேரில் சரவணன் கைது செய்யப்பட்டார். நகைகள் -பணம் மீட்கப்பட்டது..