வடமாநில அழகிகள் உல்லாசத்திற்கு இருப்பதாக விபசார அழைப்பு விடுத்த வாலிபர் கைது..!

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 26) இவர் நேற்று நீலம்பூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்( வயது 25)என்பவர் தன்னிடம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வாரத்தை கூறினார். அதற்கு ராஜமாணிக்கம் தன்னிடம் தற்போது பணமில்லை. ஏடிஎம்மில் போய் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்..