கோவை பர்னிச்சர் குடோனில் திருட்டு – 3 தொழிலாளிகள் கைது..!

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38 ) இவர் வீடுகளுக்கு உள்அலங்கார வேலையும் பர்னிச்சர் வியாபாரமும் செய்து வருகிறார். இவரது பர்னிச்சர் குடோனில் இருந்த கட்டிங் மெஷின் , அறம் ரோலர் ,ஸ்குரு டிரைவர் போன்ற பொருள்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சிவக்குமார் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கதிர்வேலு வழக்கு பதிவு செய்து அவரது குடோனில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த  அலெக்ஸ் ஸ்டிபன் (வயது 27) நவீன் ( வயது 19) ஆரோக்கியராஜ் ( வயது 18) ஆகியோரை கைது செய்தனர்.