அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை, பணம் திருட்டு – வேலைக்காரி பெண்கள் 3 பேர் மீது புகார்.!!

கோவை அருகே உள்ள கோவை புதூர் ,பிவவர்லி ஹில்சில் பகுதியில் வசிப்பவர் ஞானேஸ்வரன் (வயது 31) பி.இ. பட்டதாரி. எல். அண்ட்.டி நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் விசாகப்பட்டினத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் ரூ.30,700 பணம் ஆகியவற்றை யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார் .புகாரில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்கார பெண்கள் மல்லிகா, கிருஷ்ணவேணி, பழனியம்மாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்தாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..