ரூ.16 லட்சம் மதிப்புள்ள அலங்கார பொருட்கள் திருட்டு – கடை உரிமையாளர் மீது புகார்..!

கோவை கணபதி வி.ஜி .ராவ் நகரைச் சேர்ந்தவர் ரிஜாய் செபாஸ்டின் (வயது 34 ) இவர் அதேப் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது இடத்தில் வாடகைக்கு டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையை காலி செய்யுமாறு சுப்பிரமணியம், ரிஜாய்செபாஸ்டினிடம் கூறினார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு  இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியம் அவரது மகன் ஸ்ரீ சபரி ஆகியோர் கடைக்குள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த ரூ. 16 லட்சம் மதிப்பு உள்ள அலங்காரப் பொருட்களை எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரிஜாய் செபஸ்டின், சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அந்த நிலத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன், அவரது மகன் ஸ்ரீ சபரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..