மூதாட்டியிடம் தங்க ,வைர நகைகள் திருட்டு

கோவை அருகில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முத்தையா . இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவரது தந்தை முத்தையா ராணுவத்தில் வேலை பார்த்து தற்போது இறந்து விட்டார். இவர்கடந்த தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று தயாருடன் துடியலூர் வெள்ள கிணறு சந்திப்பில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு சென்றனர். குமரேசன் வைத்திருந்த 2 பைகளை தன்தாயாருடன் கொடுத்துவிட்டு அந்த பரிசோதனை கூடத்துக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது தாயாரிடம் கொடுத்து வைத்திருந்த 2 பைகளை காணவில்லை.அதில்15 பவுன் தங்க நகைகள், ஒரு வைர கம்மல் ,வெள்ளி பொருட்கள் இருந்தன.இவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து குமரேசன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.