பஸ்சில் பயணம் செய்த முதியவரிடம் ரூ.1 லட்சம் திருட்டு..!

திண்டுக்கல் மாவட்டம் ,பாலப்பன் பட்டி பக்கம் உள்ள அப்பிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 65 )இவர் நேற்று முன்தினம் கோவை நீலாம்பூரில் வசிக்கும் தனது அண்ணன் மகள் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்களிடம் குடும்ப செலவுக்கு ரூ 1 லட்சம் கடன் வாங்கிக் கொண்டு பஸ்சில் ஹோப் காலேஜ் வந்தார். பின்னர் அங்கிருந்து சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு தனியார் டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மணிஸ் தியேட்டர் அருகே சென்ற போது இவர் டவுசரில் வைத்திருந்த ரூ 1 லட்சத்தை காணவில்லை.யாரோ கத்தியால் வேட்டிக்கு அடியில் அணிந்திருந்த டிரவுசரை கிழித்து பணத்தை திருடி விட்டனர். இது குறித்து திருமலைசாமி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் கபில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..