தங்க- வைர நகைகள் திருட்டு வேலைக்கார பெண் மீது வழக்கு…

கோவை கணபதி, எப். சி. ஐ. ரோட்டில் உள்ள ஏ.டி.ஆர் நகரை சேர்ந்தவர் ரெஜினி (வயது 46) இவரது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன்தங்கநகைகள், 8 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ,பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவைதிடீரென்று மாயமானது. இதுகுறித்து ரெஜினி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .புகாரில் தன் வீட்டில் வேலை பார்த்து வந்த ஆவாரா ம் பாளையத்தைச் சேர்ந்த தாரணி மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் தாரணி மீது திருட்டு வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.