ரோந்து வாகனத்தை வழிமறித்து போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் – வாலிபர் கைது.!

கோவை உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தேவகுமார் .இவர் நேற்று உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து வாகனத்தில் சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஒரு வாலிபர் குடிபோதையில் ரோந்து வாகனம் செல்ல முடியாமல் வழிமறித்து நின்று கொண்டிருந்தாராம். அவரை சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவகுமார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம் . இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  தகராறில் ஈடுபட்ட உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த நாசர் மகன் முகம்மத் நஸ்ருதீன் ( வயது 24) என்பவரை கைது செய்தார். இவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.