வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல். கணவர் மீது வழக்கு.

கோவை டாட்டாபாத் கண்ணப்ப நகரை சேர்ந்தவர் சாந்தி ( வயது 38 )இவருக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகைகளும், 3 லட்சம் பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டது. .2010-ம் ஆண்டு கணவர் பாலகிருஷ்ணன் வீடு வாங்குவதற்காக மனைவியின் 50 பவுன் நகைகளையும் வாங்கி வங்கியில் அடகு வைத்து விட்டாராம்.பின்னர் அதை திருப்பி கொடுக்கவில்லை.மேலும் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தினாராம்.இதுகுறித்து சாந்தி கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கணவர் பாலகிருஷ்ணன் மீது கொலை மிரட்டல், வரதட்சணை கொடுமை,நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.