வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் – கணவர் மீது இளம்பெண் புகார்.!

கோவை போதனூர், பாரதி நகர், காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் சௌந்தர்யா லட்சுமி ( வயது 26) சென்னையில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெகநாதன் ( வயது 28) என்பவருக்கும் 18 -10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 பவுன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜெகநாதன் தனது மனைவியிடம் கூடுதலாக நகையும், ரூ 3 லட்சத்து 50 ஆயிரம் பணமும் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தினார் .மேலும் அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிகிறது .இது குறித்து சௌந்தர்யா லட்சுமி தெற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி கணவர் ஜெகநாதன் மீது வரதட்சணை கொடுமை,கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..