பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களுடன் மெசேஜ் அனுப்பி மிரட்டல் – வாலிபர் கைது..!

கோவை பீளமேடு பக்கம் உள்ள சேரன் மாநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 27) இவர் கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த அஜய் ( வயது 27) என்பவருடன் பழகி வந்தார்.  காதலன் அஜய் 2003-ம் ஆண்டு அவரை திருமணம் செய்ய எண்ணியிருந்தார். இந்த நிலையில் அஜய் பற்றிய தவறான தகவல்கள் பிரியதர்ஷினிக்கு தெரிய வந்ததது. இதனால் அவர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் அஜய் அவருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்தும் ஆபாச புகைப்படங்களுடன், மெசேஜ் அனுப்பியும் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து பிரிய தர்ஷினி பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் வழக்கு பதிவு செய்து அஜய்யை நேற்று கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..