ஆபாச படம் அனுப்பி இளைஞர்களுக்கு மிரட்டல் : மோசடி பெண் குறித்து பரபரப்பு தகவல்!!!

கோவை அடுத்து பன்னிமடையைச் சேர்ந்த மதுமிதா (வயது 32). இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து எம்.பி என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கி இருப்பதாகவும், பங்கு வர்த்தகத்தின் முதலீடு செய்த அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் கூறினார். மேலும் தனது நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 20,000 தருவதாகவும், முதலீடு செய்த ரூபாய் ஒரு லட்சத்தையும் ஒரு ஆண்டில் திரும்பி தந்து விடுவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். அதோடு புதிய முதலீட்டாளர்களை அறிமுகம் செய்து வைத்தால் ஐந்து சதவீதம் வரை ஊக்கத் தொகை தருவதாகவும் தெரிவித்தார். இதை நம்பி அவர்களின் நிறுவனத்தில் ஏராளமானனோர்  லட்சக் கணக்கில் பணம் முதலீடு செய்தனர். இவ்வாறாக அவர் பலரிடம் இருந்து ரூபாய் 2 கோடி வரை முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் தருவதாக கூறிய தொகையை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பிறகு முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் முதலீடு செய்தவர்கள் அவரை தொடர்பு கொண்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. ஒரு சிலர் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று தங்கள் பணத்தை கேட்டு உள்ளனர். அப்பொழுது தன்னை மிரட்டுவதாக பணம் கேட்டு வந்தவர்களின் மீது போலீசில் புகார் அளித்த உள்ளார். அடுத்த சில நாட்களில் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டிலும் அவர் இல்லை. இதனால் அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. அவர் மீது முதல்ட்டாளர்கள் கோவை தடாகம் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில் மதுமிதா துபாயில் இருப்பது தெரிய வந்தது. அங்கிருந்தவாறு ஆன்லைன் மூலமாக சிலரிடம் அதிக லாபம் தருவதாக கூறி லட்சக் கணத்தில் பணத்தை முதலீடு பெற்று உள்ளார். அத்தோடு அவர் துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்து அங்கு வரும் இளைஞர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டி வந்து உள்ளார். அதில் ஒரு இளைஞர் போலீசில் புகார் அளிக்க போவதாக தெரிவித்தும் அங்கு இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் கொச்சிக்கு வந்தார். இதை பாதிக்கப்பட்ட வாலிபர்கள் கேரளாவில் உள்ள நண்பர்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் ஏற்கனவே மதிமிதாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து கொச்சி விமான நிலையத்தில் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மினி ஜான் பிரதீப் என்பவர் அளித்த புகாரின் பேரில் மதுமிதாவின் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவை மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களிடம் பணம் மோசடி செய்திருப்பதாக தெரிய வருகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..