கூடலூர் தனியார் எஸ்டேட்டில் சந்தன மரங்களை பதுக்கிய மூவர் கைது..!

நீலகிரி,கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா்,சம்மந்தப்பட்ட 3 பேரைக் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை சுற்றியும் வனபகுதி உள்ளன, இதில் வனபகுதி யொட்டிய ஓவேலி தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக்கட்டைகள் இருப்பதாக ரகசிய கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலா் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் , வருவாய்த் துறை மற்றும் போலீஸாருடன் சென்று குடோனை சோதனையிட்டனா்.

அங்கே குடோனில் இருந்த 9 சந்தன மரக்கட்டைகளை, வனத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனா். விசாரணையில் எஸ்டேட் மேலாளா் நிஜாமுதீன் (வ34), குடோன் பொறுப்பாளா் பன்னீா்செல்வம் (வ61), கள மேலாளா் பியா்சன் (வ55) ஆகியோரைக் கைது செய்து,மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டதாக வனத்துறை அலுவலர் தெரிவித்தார்