கோவை: பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்இதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை காந்திபுரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்களும், கொடிசியா மைதானத்தில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களும், உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
அதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பஸ்களும், சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50 பஸ்கள், தேனிக்கு 40பஸ்கள் என 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், கொடி சியா மைதானம், சிங்கா நல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களுக்கு போதுமான இணைப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.