இன்று மஹாவீர் ஜெயந்தி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – டாஸ்மாக், இறைச்சி கடைகளுக்கு தடை..!

இன்று ஏப்ரல் 4ம் தேதி நாடு முழுவதும் மஹாவீரர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பங்குச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல மாநிலங்களில் மதுபான கடைகளைத் திறக்கவும், மதுபான பார்களைத் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இறைச்சி கடைகளைத் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இண்று டாஸ்மாக் கடைகளும், இறைச்சி கடைகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தடையை மீறி இயங்கும் இறைச்சி கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..