கோவையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கான “தொடுவானம்” விழிப்புணர்வு..!

கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான “தொடுவானம்” விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி கே.ஈஸ்வரசாமி ,கோவை கணபதி பா.ராஜ்குமார், திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ.ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், R.S.புரம் பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ், ஆதிதிராவிடர் நலகுழு வடக்கு மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ,மாணவியர்களுக்கு மேல்படிப்புக்கான வழிகாட்டுதல், தொழிற்கல்வி வேலை வாய்ப்பு பற்றி பேசினர் . அரசின் நலத்திட்டங்களை வழங்கினர்..