காரில் 438 கிலோ குட்கா கடத்திய வியாபாரி கைது..!

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் கரையாம் பாளையம் – வெள்ளானைப்பட்டி ரோட்டில் உள்ள மயிலம்பட்டி பிரிவில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியா வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 438 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பகவத்சிங் ( வயது 54) என்பவர் கைது செய்யப்பட்டார் .இவர் தற்போது வெள்ளானைப்பட்டி கைக்கோலம் பாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..