கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:-
கோவை மாநகர போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடும், “டிராபிக் வார்டன் ” அமைப்பு லாப நோக்கம் இல்லாத தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கோவையில் வசிப்பவராக இருக்க வேண்டும். 25-ல் இருந்து, 45 வயதுக்குள் இருக்க வேண்டும், நல்ல ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும். மேலும், குற்றப் பின்னணி இல்லாதவராக இருத்தல் அவசியம்.
இந்த அமைப்பில் இணைந்து சேவை புரிய விருப்பமுள்ள ஆண், பெண் இருபாலரும் வருகிற 23ம் தேதி ( ஞாயிறு)காலை 10:30 மணிக்கு கல்விச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் கார்டு, உரிமம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் உள்ள டிராபிக் வார்டன் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. சந்தேகங்களுக்கு, 99941 85221 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.