வசூல் ராஜாவான டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் – தாம்பரம் போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு .!!

தாம்பரம் : புதியதாக பொறுப்பேற்றுள்ள தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக். இவர் சமீப காலமாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அன்புராஜ் இவர் வாகனங்களை மடக்கி சரமாரியாக பணம் வசூலிப்பதாக போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் உண்மைத் தன்மை இருப்பதாக போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் கண்டுபிடித்து ட்ராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு ராஜை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்..