டிராவல்ஸ் பஸ்சில் ஐ.டி. பெண் ஊழியர் மானபங்கம் – ஒருவர் கைது..!

கோவை: விருதுநகர் மாவட்டம் ஆத்து மேடு,சிவந்திபுரம் வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சீமா பிரியதர்ஷினி ( வயது 26 ) பி. இ. பட்டதாரி. தனியார் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று கோவையில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். டிராவல்ஸ் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் காந்திபுரம் மத்திய சிறை அருகே வந்த போது அதே பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்த ஒருவர் சீமா பிரியதர்ஷினியை தொட்டு மானபங்கம் செய்தாராம் . உடனே அவர் சத்தம் போட்டார்.. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அந்த ஆசாமியை பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் பக்கம் உள்ள மஞ்ச குடியைச் சேர்ந்த சந்திரன் என்ற சுபாஷ் சந்திர போஸ் ( வயது 41) என்பது தெரிய வந்தது. இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மான பங்கம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..