திருச்சி விவசாயி தீக்குளிக்க முயற்சி – ஸ்தம்பித்து போன திருச்சி ஆட்சியர் அலுவலகம்.!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வந்தலை கூடலூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி குமரவேல் (65). இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தாா். மனுவுடன் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த அவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைப்பாா்த்த போலீஸாா் உடனடியாக அவரை தடுத்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.
குமரவேலிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில்
அவருக்கு சொந்தமான நிலத்தின் நில அளவை சா்வேஎண் வரைபடத்தில் வேறு இடத்தில் குறிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருடைய நிலத்தில் மற்றொருவரின் நிலத்தின் சா்வே எண் குறிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் அதை மாற்றிக்கொடுக்குமாறு அவா் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் அலுவலா் உள்ளிட்ட வருவாய்த் துறையினரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்துள்ளனா். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக குமரவேல் கூறியுள்ளாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விவசாயத்தை குளிக்க முயற்சி செய்த சம்பவம் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது