திருச்சி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்..!

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பு அர்ஷியாபேகம் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் .இந்திய மருத்துவக் கழகச் செயலாளர் முகேஷ் முன்னிலை வகித்தார் .குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் மெடிக்கல் சூப்பிரண்ட் டாக்டர் அருண்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி சித்த மருத்துவ பிரிவு அருகே நிறைவடைந்தது இதில் செவிலியர்கள் டாக்டர்கள் பலர் பங்கேற்றனர் இதற்கான ஏற்பாடுகளை இந்திய குழந்தை மருத்துவ சங்கச் செயலாளர் சிவகுருநாதன் செய்திருந்தார். இதில் ஏராளமான டாக்டர்கள் செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டு தாய்ப்பால் வார விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.