திருச்சி எஸ்.பி.வருண் குமார் விவகாரம்… சேவியர் பெலிக்ஸ் கட்சியிலிருந்து நீக்கம் – சீமான் உத்தரவு.‌..!

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேவியர் பெலிக்சை கட்சியிலிருந்து நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது தன்னை பற்றி அவதூறாக பேசியதாக குறி திருச்சி எஸ் பி வருண் குமார் விளக்கம் கேட்டிருந்தார்.

இதற்கு சாட்டை துரைமுருகன் கொடுத்த தகவலின்படி சீமான் பேசியதாக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் வழக்கறிஞர் சேவியர் பெலிக்ஸ் தன்னிச்சையாக விளக்கக் கடிதம் அளித்திருந்தார். ஆனால் இந்த கடிதத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் கலந்தாலோசனை செய்யாமல் கடிதம் அனுப்பியதால் அவரை கட்சியிலிருந்து நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார்.