விஜய் ஸ்டெயிலில்… ஐஅம் வெயிட்டிங்… கையில் லத்தியுடன் திருச்சி எஸ்.பி வருண்குமார் போட்டோ… இணையத்தில் வைரல்..!!!

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பி யாக இருப்பவர் வருண்குமார் ஐபிஎஸ் . இவர் பதவி ஏற்றது முதல் திருச்சியில் உள்ள சமூகவிரோதிகள் ரவுடிகளை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். சமூக விரோத செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் என்னுடைய மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கையில் லத்தியுடன் ஐ அம் வெயிட்டிங் என தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சினிமா பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என்ற டயலாக்குடன் எஸ்.பி. வருண்குமார் தன் மொபைல் போனில் கையில் லத்தியுடன் நிற்பதுபோல வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில் குற்றங்களை பட்டியலிட்டு புகார் தெரிவிக்க விரும்பினால் என்னை 9487464651 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
திருச்சி வாத்தலை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி தனிப்பிரிவு போலீசாக இருந்தவர் விஜயகுமார். அதுபோல, மண்ணச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாக இருந்தவர் வினோத். இவர்கள் இருவரும் அப்பகுதியில் நடக்கும் சட்ட விரோத லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு காவலர்களையும் நேற்று முன்தினம் இரவு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டார். இவர்களில் போலீஸ்காரர் விஜயகுமார் அண்மையில் அடிதடி வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் திருச்சி மாவட்ட எல்லைக்குள் நடைபெறும் கஞ்சா லாட்டரி கள்ள மது விற்பனை பொது மக்களுக்கு இடையூறாக வாகனத்தில் வீலிங் செய்து அலப்பறையில் ஈடுபடும் இளைஞர்கள் கட்டப்பஞ்சாயத்து ஏமாற்றுதல் மறைமுக மிரட்டல் எடுப்பவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நியாயமான முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. வருண் குமாரின் ஐபிஎஸ் இன் இந்த லத்தி ஸ்டாண்டிங் புகைப்படம் வைரலாகி சமூக விரோதிகளும் ரவுடிகளும் கலக்கமடைந்திருக்கிறார்கள்..