திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு..!

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது . மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசியதாவது வருகின்ற ஒன்பது பத்து ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் ஆகிய பணிகளை நாம் சிறப்பாக செய்திட வேண்டும் என்றும் அன்றைய தினம் நான் சில பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டு பிறகு என்னை மாவட்ட பொறுப்பாளராக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியமித்துள்ளதால் நான் அங்கு பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த இரண்டு நாட்களில் நமது கழகத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் இந்த பணியை பாக முகவர்கள் மூலம் ஒவ்வொரு பாகங்களிலும் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மேலும் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மே மாதம் கூட்டம் நடத்தி நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற்றோம் அதே போல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு 184 தொகுதிகளை விட தமிழக முதல்வர் அவர்கள் கூறியது போல் இருநூறு தொகுதிகளை நாம் வென்றெடுக்க வேண்டும் என்றும் அதற்கு நமது உழைப்பு கடினமாக இருக்க வேண்டும் என்றும் எந்த மாவட்டத்திலும் இல்லாதது போல் திருச்சி தெற்கு மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுவதாக தமிழக முதல்வர் கூறியதை நாம் நிரூபிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். மேலும் செயற்குழு கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.