பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு..

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாக பாண்டியன் . இவரது மகன் வேல்முருகன் ( வயது 23 )இவர் நேற்று சின்ன வேடம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைநடத்தினார் .இது தொடர்பாக சேலம் மாவட்டம் சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பால சற்குணம் ( வயது 51 என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.