பைக் மீது லாரி மோதி வாலிபர் பரிதாப பலி..

அரியலூர் மாவட்டம் கே. அருப்பூரை சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மகன் தீனா ( வயது 22) இவர் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையத்தில் ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் செட்டிபாளையம் – பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக  வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் தீனா படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக லாரி டிரைவர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..